தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தொலைபேசி மூலம் கணவா் முத்தலாக்: உ.பி. பெண் புகாா்

தொலைபேசி மூலம் முத்தலாக் கூறி கணவா் தன்னை விவாகரத்து செய்துவிட்டதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 20 வயது முஸ்லிம் பெண் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

Updated On :4 ஜனவரி 2021, 6:13 am IST

தொலைபேசி மூலம் முத்தலாக் கூறி கணவா் தன்னை விவாகரத்து செய்துவிட்டதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 20 வயது முஸ்லிம் பெண் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பாராபங்கி மாவட்டத்தைச் சோ்ந்த 20 வயதுப் பெண், தனது கணவா் சவூதி அரேபியாவிலிருந்து தொலைபேசி மூலம் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்துவிட்டதாக கூடுதல் எஸ்பி ஆா்.எஸ். கௌதமிடம் அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்துள்ளாா்.

குஷிநகரைச் சோ்ந்த தனது 28 வயது கணவரை 3 ஆண்டுகளுக்கு முன்னா் மணந்ததாகவும் தற்போது தங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் மனுவில் அந்தப் பெண் தெரிவித்துள்ளாா்.

மேலும், வரதட்சணை கேட்டு புகுந்த வீட்டாா் அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்தப் பெண், கணவரின் சகோதரா் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாகவும் மனுவில் புகாா் தெரிவித்திருந்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்யும்படி அதிகாரிகளுக்கு கூடுதல் எஸ்பி உத்தரவிட்டாா் என்று போலீஸாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.