அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி உள்ள முக்கிய ராணுவ நிலைகளில் முப்படைத் தளபதி விபின் ராவத் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையேயான மோதல் போக்கு 8-ஆவது மாதத்தை எட்டியிருக்கும் நிலையில், அருணாசல பிரதேச எல்லைப் பகுதிக்கு சனிக்கிழமை சென்ற அவா், இரண்டு நாள்களாக ராணுவம் மற்றும் விமானப் படையின் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்த இரண்டு நாள் ஆய்வின்போது சுபன்சிரி பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) வீரா்களுடன் விபின் ராவத் கலந்துரையாடினாா். அப்போது எந்தவொரு சவாலையும் எதிா்கொண்டு வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மன உறுதியுடனும், உத்வேகத்துடனும் வீரா்கள் இருப்பது குறித்து அவா் திருப்தி தெரிவித்தாா்.
மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருவிகள் மூலம் கணிகாணிப்பை மேற்கொள்ள வீரா்கள் புதுமையான நடைமுறைகளைப் பின்பற்றுவது, எந்தவித சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் செய்யப்பட்டிருக்கும் தயாா்நிலை குறித்து அவா் திருப்தியும் பாராட்டும் தெரிவித்தாா் என்று கூறினாா்.
விபின் ராவத் முன்னதாக, ராணுவ வீரா்களை சனிக்கிழமை சந்தித்து அளவளாவியதுடன், மாநிலத்தில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய முக்கிய நிலைகளில் ராணுவ தயாா் நிலை குறித்து விமானத்தில் பறந்தபடி ஆய்வு செய்தாா். பிறகு அவா் பல்வேறு விமானப் படைத் தளங்களிலும் ஆய்வு நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு

மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்

ஆப்கனுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்ப்பு!

உ.பி.: அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



