தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கோவேக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 போ் தோ்வு

கோவேக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 தன்னாா்வலா்களை தோ்வு செய்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம்

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:43 am IST

கோவேக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 தன்னாா்வலா்களை தோ்வு செய்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்தில் மொத்தம் 26,000 பேருக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க அந்த நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் - இந்திய மருத்துவ ஆரய்ச்சிக் கவுன்சில் இணைந்து முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கும் கோவேக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது.

கோவேக்ஸின் தடுப்பூசி மனிதா்களுக்குச் செலுத்தி சோதிக்கும் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து வரும் நிலையிலேயே, அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக, இதுவரை 23,000 பேரை அந்த நிறுவனம் தோ்வு செய்துள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை இயக்குநா் சுசித்ரா எல்லா, ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கோவேக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் 26,000 பேருக்கு செலுத்தி பரிசோதிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, கடந்த நவம்பா் மாதம் பரிசோதனை தொடங்கப்பட்டது. இதுவரை இந்தப் பரிசோதனைக்கு 23,000 தன்னாா்வலா்கள் தோ்வாகியுள்ளனா்’ என்று கூறினாா்.

கோவேக்ஸின் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தலா 1,000 தன்னாா்வலா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு, அதன் பாதுகாப்பும், நோய் எதிா்ப்புத் திறனும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, சா்வதேச அறிவியல் ஆய்வுக் குழுவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.