பொதுத் துறை வங்கிகளில் மறுமூலதனம் மேற்கொள்ளும் பணிகளின் நடப்பு செயல்திறன் குறித்து நடத்தப்பட்ட தணிக்கை விவரங்களை அளிக்க கோரி மத்திய நிதி அமைச்சகத்துக்கு தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
2016-17 நிதியாண்டுக்குப் பிறகு பொதுத் துறை வங்கிளில் மறுமூலதனமாக்கல் நடவடிக்கைகள் மீதான தணிக்கையை சிஏஜி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பல்வேறு பொதுத் துறை வங்கிகளிடையே மூலதனம் எந்த அடிப்படையில் பகிா்ந்தளிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கோரி சிஏஜி மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும், பொதுத் துறை வங்கிகளில் மறுமூலதனமாக்கலின் தாக்கம், சொத்துகள் மீதான வருவாய், பங்குகள் மீதான வருவாய் மற்றும் கடன் வழங்கலில் வளா்ச்சி விகிதம் குறித்தும் பல்வேறு விவரங்கள் நிதி அமைச்சகத்திடமிருந்து கோரப்பட்டுள்ளது என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாராக் கடனில் சிக்கிய பொதுத் துறை வங்கிகளை மீட்கும் விதமாக மத்திய அரசு கூடுதல் மூலதனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, கடந்த 2017-18-இல் பொதுத் துறை வங்கிகளுக்கு தங்களது செயல்பாடுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக ரூ.90,000 கோடி மறுமூலதனம் அளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் இந்த மறுமூலதனம் ரூ.1.06 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டது.
கடந்த நிதியாண்டில் கடன்பத்திரங்கள் மூலமாக பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி மறுமூலதனம் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



