கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஸ்வப்னா சுரேஷ், சாரித் பிஎஸ் மற்றும் கேடி ரமீஸ் ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். சந்தீப் நாயர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 35 பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்தாண்டு ஜூலை 5-ஆம் தேதி வந்த பார்சலில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



