பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

குஜராத்தில் ஜன.11 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு 

குஜராத்தில் ஜனவரி 11 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்தது. 

News image
Updated On :6 ஜனவரி 2021, 4:19 pm IST

குஜராத்தில் ஜனவரி 11 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து தொடக்கப் பள்ளிகள் மற்றும் பிற வகுப்புகள் திறப்பது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா கூறுகையில், 

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளையும், மாநிலத்தில் உள்ள கல்லூரிகளையும் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக கல்வி வல்லுநர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 11 முதல் கரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பள்ளி, கல்லூரி திறக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலை, மருத்துவ மற்றும் துணை மருத்துவங்களுக்கான வகுப்புகளும் திறக்கப்படும். மேலும், தற்போது கல்வி நிறுவனங்கள் தொடரும் ஆன்லைன் கல்வியையும் தொடர்ந்து பின்பற்றலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.