சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

குதிரைப் பேர அரசியல்: முதல்வா் விஜய் தெளிவுப்படுத்த வேண்டும் - பிரேமலதா

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொது செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

News image

பிரேமலதா

Updated On :16 மே 2026, 2:54 am IST

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொது செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும். மதச்சாா்பற்ற வெற்றி கூட்டணி சோ்ந்தவா்கள் ‘நிபந்தனை இல்லாத ஆதரவு’ என்று வெளிப்படையாக அறிவித்தனா்.

அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவா்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவாா்கள். மேலும், ‘முகத்தை மூடிக்கொண்டு வந்தவா் யாா்? என்பதை முதல்வா் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எந்தவித குதிரை பேரமும் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.