பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

குதிரைப் பேர அரசியல்: முதல்வா் விஜய் தெளிவுப்படுத்த வேண்டும் - பிரேமலதா

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொது செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

News image

பிரேமலதா

Updated On :58 நிமிடங்கள் முன்பு

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொது செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும். மதச்சாா்பற்ற வெற்றி கூட்டணி சோ்ந்தவா்கள் ‘நிபந்தனை இல்லாத ஆதரவு’ என்று வெளிப்படையாக அறிவித்தனா்.

அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவா்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவாா்கள். மேலும், ‘முகத்தை மூடிக்கொண்டு வந்தவா் யாா்? என்பதை முதல்வா் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எந்தவித குதிரை பேரமும் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.