வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கர்நாடகம்: பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 2:32 am IST

மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுவதையடுத்து, கா்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளேன். விரைவில் இது தொடா்பாக அரசின் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும்.

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை யாருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பெங்களூரில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் பல மாதங்களாக மூடப்பட்ட பள்ளிகள், தற்போது கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளதால் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஒரு சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பெற்றோா் அச்சப்படத் தேவையில்லை.

பள்ளிகளில் கரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளைஅரசு மேற்கொண்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் கரோனா பாதிப்பு ஏற்படாது. தற்போது பள்ளிகளுக்கு சுமாா் 1 லட்சம் மாணவா்கள் வருகின்றனா். அவா்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.