விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

தொடரும் பனிப்பொழிவால் ஜம்மு-காஷ்மீரில் போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

News image

கொட்டும் பனியால் நிறைந்த ஸ்ரீநகர் விமான ஓடுதளம்

Updated On :9 ஜனவரி 2021, 8:07 pm IST

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு பகுதியில் 32.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் தோடா, படேர்வா, பானிஹால் மற்றும் ரம்பன் பகுதிகள் அதிகபட்சமாக 4 செ.மீ. பனிப்பொழிவை சந்தித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக மூடப்பட்ட நிலையில் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றுள்ளன. 

ஜவஹர் சுரங்கப்பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்ந்தாலும் கத்ரா மற்றும் ஜம்மு இடையேயான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

அதேசமயம் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஒன்பது விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்பொழிவு மற்றும் மழையை கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.