பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

பிரதமர் மோடி,ஜெர்மனி பிரதமர் ஆலோசனை

இந்திய பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே கரோனா தொற்று உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொலி வழியாக புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது. 

Updated On :7 ஜனவரி 2021, 4:35 am IST


புது தில்லி: இந்திய பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே கரோனா தொற்று உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொலி வழியாக புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது. 

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே கரோனா தொற்றை எதிர்கொள்ளுதல், இருநாட்டு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், குறிப்பாக இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமரிடம் விவரித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. 
இதுகுறித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "இந்த ஆண்டு இந்தியா-ஜெர்மனி இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 70-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் ஆக்கபூர்வமான முறையில் ஆலோசனை நடைபெற்றது' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.