கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

'3 குழந்தைகள் தீக்காயத்தாலும் 7 குழந்தைகள் மூச்சுத்திணறலாலும் இறந்துள்ளன'

மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 3 குழந்தைகள் தீக்காயத்தாலும்

News image

'3 குழந்தைகள் தீக்காயத்தாலும் 7 குழந்தைகள் மூச்சுத்திணறலாலும் இறந்துள்ளன'

Updated On :9 ஜனவரி 2021, 11:50 am IST


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 3 குழந்தைகள் தீக்காயத்தாலும் 7 குழந்தைகள் மூச்சுத்திணறலாலும் இறந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Story image

தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீ விபத்து குறித்து மருத்துவர்கள் கூறுகையில், மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பிரிவில் நள்ளிரவு 1.30 மணிக்கு நேரிட்ட பயங்கர தீ விபத்தில் பிறந்து ஒரு மாதம் முதல் மூன்று மாதத்துக்குள்ளான 10 பச்சிளம் குழந்தைகள் இந்த தீ விபத்தில் இறந்துள்ளன.   7 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

Story image

முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தில் சிக்கிய 10 குழந்தைகளில் 3 குழந்தைகள் தீக்காயத்தாலும், 7 குழந்தைகள் மூச்சுத்திணறலாலும் உயிரிழந்துள்ளன. தீப்பிடித்த போது அங்குப் பணியிலிருந்த செவிலியர்களும் ஊழியர்களும் துரிதமாக செயல்பட்டு 7 குந்தைகளை மீட்டுள்ளனர். ஆனால் அவர்களால் மீதி 10 குழந்தைகளை மீட்க முடியாமல் போனது என்றும் அமைச்சர் டோப் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.