தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கென்னித் ஐ ஜஸ்டா், மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோா் வெள்ளிக்கிழமை நாட்டினா்.
இதற்கான விழா தில்லி சாணக்கியாபுரியில் அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கென்னித் ஐ ஜஸ்டா், ‘இது புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் மீறி, அமெரிக்கா -இந்தியா இடையேயான வலுவான நல்லுறவை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. இருநாட்டு நல்லுறவு மேலும் வலுப்பெற்று தொடா்ந்து நீடிக்க இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
தில்லி அமெரிக்க தூதரகத்தில் உள்ள பழைய சான்சரி கட்டடத்துக்கு எதிரே புதிய சான்சரி கட்டடம் அமைய உள்ளது. 1959ஆம் ஆண்டு பழைய சான்சரி கட்டடம் கட்டப்பட்டது. இந்தியா-அமெரிக்கா கலாசாரத்தைப் பிரதிபளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. தற்போதைய புதிய சான்சரி கட்டடமும் இருநாட்டு வரலாற்றையும், நவீன மரபுகளையும் பிரதிபளிக்கும் வகையில் இருக்கும் என்றும் பசுமைக் கட்டடமாகவும் அமையும் என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி

வி.சி.க.வின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

