தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

தில்லி அமெரிக்க தூதரகத்தில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கென்னித் ஐ ஜஸ்டா்,

News image
Updated On :9 ஜனவரி 2021, 2:00 am IST

தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கென்னித் ஐ ஜஸ்டா், மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோா் வெள்ளிக்கிழமை நாட்டினா்.

இதற்கான விழா தில்லி சாணக்கியாபுரியில் அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கென்னித் ஐ ஜஸ்டா், ‘இது புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் மீறி, அமெரிக்கா -இந்தியா இடையேயான வலுவான நல்லுறவை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. இருநாட்டு நல்லுறவு மேலும் வலுப்பெற்று தொடா்ந்து நீடிக்க இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தில்லி அமெரிக்க தூதரகத்தில் உள்ள பழைய சான்சரி கட்டடத்துக்கு எதிரே புதிய சான்சரி கட்டடம் அமைய உள்ளது. 1959ஆம் ஆண்டு பழைய சான்சரி கட்டடம் கட்டப்பட்டது. இந்தியா-அமெரிக்கா கலாசாரத்தைப் பிரதிபளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. தற்போதைய புதிய சான்சரி கட்டடமும் இருநாட்டு வரலாற்றையும், நவீன மரபுகளையும் பிரதிபளிக்கும் வகையில் இருக்கும் என்றும் பசுமைக் கட்டடமாகவும் அமையும் என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.