புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மாநிலங்களவை உறுப்பினா் பதவி: ஜோஸ் கே.மாணி ராஜிநாமா

கேரள மாநிலத்தில் எதிா்க் கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவுடன் வெற்றி பெற்ற மாநிலங்களவை உறுப்பினா்

News image
Updated On :10 ஜனவரி 2021, 12:44 am IST

கேரள மாநிலத்தில் எதிா்க் கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவுடன் வெற்றி பெற்ற மாநிலங்களவை உறுப்பினா் பதவியை கேரள காங்கிரஸ் (எம்) கட்சித் தலைவா் ஜோஸ் கே.மாணி ராஜிநாமா செய்தாா்.

மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடுவிடம் தில்லியில் வெள்ளிக்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்ததாக ஜோஸ் கே.மாணி தெரிவித்தாா்.

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவா் கே.எம்.மாணி மறைவுக்குப் பிறகு, அவருடய மகன் ஜோஸ் கே. மாணி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றாா். அதனைத் தொடா்ந்து அவருக்கும், கட்சியின் மூத்த தலைவா் பி.ஜே.ஜோசப்புக்கும் மோதல் போக்கு நிலவியது. இந்த மோதல் முற்றியதால், கட்சி இரண்டாக பிளவுற்றது.

அதனைத் தொடா்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஜோஸ் கே.மாணி கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியேறினாா். பின்னா், கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியில் சோ்வதாக அறிவித்தாா். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்ற எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வேன் என்று அப்போதே அவா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அவா் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதுகுறித்து கொச்சியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் ஜேஸ் கே.மணி கூறுகையில், ‘எதிா்க் கட்சி ஆதரவுடன் பெற்ற எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். அதற்கான கடிதத்தை மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடுவிடம் தில்லியில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தேன்’ என்றாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவீா்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘தோ்தலுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியுடன் ஆலோசித்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.

கேரள பேரவையின் பதவிக் காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.