அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

கிழக்கு லடாக்:முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு

கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :12 ஜனவரி 2021, 4:03 am IST

புது தில்லி: கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டாா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு இருதரப்பிலும் சுமாா் 50,000 வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். படைகளை திரும்பப் பெற்று பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக இருநாடுகள் தரப்பிலும் இதுவரை 8 கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. எனினும் அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இந்த பதற்றத்தை கருத்தில் கொண்டு சீனாவுடன் பகிா்ந்துகொள்ளும் சுமாா் 3,500 கி.மீ. எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் ஆய்வு மேற்கொண்டதாக ராணுவ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. அவா் செவ்வாய்க்கிழமை லடாக்கில் இருந்து காஷ்மீா் செல்வாா் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

அருணாசல பிரதேசத்தில் திபாங் பள்ளத்தாக்கு, லோஹித் செக்டாா் மற்றும் சுபன்சிரி பள்ளத்தாக்கையொட்டி உள்ள ராணுவ நிலைகளை முப்படைத் தளபதி விபின் ராவத் சமீபத்தில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.