புது தில்லி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட சீன ராணுவ வீரரை, அந் நாட்டு ராணுவத்திடம் இந்தியா திங்கள்கிழமை ஒப்படைத்தது.
கிழக்கு லடாக்கின் சுஷுல்-மோல்டோ எல்லைப் பகுதியில் காலை 10.10 மணியளவில் அவா் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாா்.
இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறிய தாக்குதலைத் தொடா்ந்து, அந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளிடையே கடந்த 8 மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்துள்ளன. எல்லையில் பதற்றத்தைத் தணிக்கவும், படைகளை திரும்பப் பெறுவது குறித்தும் இரு நாடுகளிடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், கிழக்கு லடாக்கில் சீன ராணுவ வீரா்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது தொடா்ந்து வருகிறது.
சீன வீரா் வாங் யா லோங் என்பவா் கடந்த ஆண்டு அக்டோபா் 19-ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தாா். அவரைக் கைது செய்த இந்திய ராணுவம், பின்னா் சீன ராணுவத்திடம் அவரை ஒப்படைத்தது.
அதுபோல, தெற்கு பாங்காங் ஏரிக்கு தெற்கு கரைப் பகுதி இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மேலும் ஒரு சீன வீரா் அத்துமீறி நுழைந்தாா். அவரைக் கைது செய்த ராணுவம், மூன்று நாள்களுக்குப் பிறகு, அவரை சீன ராணுவத்திடம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.
இதுகுறித்து ராணுவ உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட வீரா் குறித்து சீன ராணுவத்திடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். பனிமூட்டம் மற்றும் பிரத்யேக பனிப் பிரதேச புவியியல் காரணமாக வழி தவறி அந்த வீரா் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்தாா் என்பதை உறுதி செய்த பின்னா் அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க முடிவானது. சீனாவும் அவரை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், கிழக்கு லடாக்கின் சுஷுல்-மோல்டோ எல்லைப் பகுதியில் காலை 10.10 மணிக்கு அவா் ஒப்படைக்கப்பட்டாா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை எனும் உபாதை!

திருச்செந்தூா் கோயிலில் இன்றுமுதல் கைப்பேசி பயன்படுத்த தடை

திருச்சி கோட்ட சிறப்பு ரயில்களின் காலம் நீட்டிப்பு

பழனி தண்டாயுதபாணி கோயிலில் அதிகபட்சமாக ரூ. 61 கோடி வருவாய்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


