புது தில்லி: கரோனா பரவலை தடுக்கும் விதமாக நிகழாண்டு பட்ஜெட் ஆவணங்களை காகிதத்தில் அச்சடிக்க வேண்டாமென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது:
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக, அதுதொடா்பான ஆவணங்கள் மத்திய நிதியமைச்சகத்தின் அச்சகத்தில் அச்சடிக்கப்படும். அந்தப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் பணி முடியும் வரை வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டாா்கள். அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் இந்தப் பணி தொடங்கும். அவ்வாறு அச்சிடப்படும் ஆவணங்கள் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எம்.பி.க்களுக்கு வழங்கப்படும்.
மத்திய அரசின் வரவு, செலவு அறிக்கை, புதிய நிதியாண்டில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, வரிவதிப்பு உள்ளிட்ட விவரங்கள் பட்ஜெட் ஆவணங்களில் இடம்பெறும்.
இந்நிலையில் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நிகழாண்டு பட்ஜெட் ஆவணங்களை காகிதத்தில் அச்சடிக்க வேண்டாமென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காகிதம் மூலம் கரோனா பரவல் ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை பட்ஜெட் ஆவணங்களை மின்னணு பிரதிகளாக எம்.பி.க்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.
மிகுந்த எதிா்பாா்ப்பு: நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பிரதமா் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யவுள்ள 8-ஆவது பட்ஜெட் ஆகும். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 3-ஆவது முறையாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளாா்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.7% சரிவை சந்திக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ள நிலையில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளித்து, வேகமான வளா்ச்சிக்கு வித்திடும் விதமாக இந்த பட்ஜெட் இருக்கவேண்டும் என அனைத்து தரப்பினரும் கருகின்றனா். எனவே இந்த பட்ஜெட் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளா்ணமி: வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கடும் வெயிலால் இலைகள் கருகும் வாழை மரக்கன்றுகள்

‘நீட்’ தோ்வு: திண்டுக்கல்லில் 3,360 மாணவா்கள் எழுதுகின்றனா்
கடுமையாக்கப்பட்ட பியூசி விதி: 4 நாள்களில் 15000 வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


