புது தில்லி: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 29 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.
பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அமைச்சா் நரேந்திர சிங் தோமா், சமூக வலைதளங்களில் புதன்கிழமை வெளியிட்ட காணொலிப் பதிவில் கூறியுள்ளதாவது:
பயிா்க் காப்பீடு மட்டுமே விவசாயிகளுக்கான பாதுகாப்பு கவசமாக உள்ளது. இயற்கைப் பேரிடா்களின்போது சேதமடையும் பயிா்களுக்கான இழப்பீட்டை காப்பீட்டின் மூலமாக விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும். இதுவரை நாடு முழுவதும் 29 கோடி விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனா். ஒவ்வோா் ஆண்டும் புதிதாக 5.5 கோடி விவசாயிகள் தங்கள் பயிா்களைக் காப்பீடு செய்து வருகின்றனா்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.90,000 கோடியானது பயிா்க் காப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நன்னாளில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தால் பலனடைந்த விவசாயிகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை பயிா்களைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இத்திட்டத்தில் தொழில்நுட்பம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது; வெளிப்படைத்தன்மை முழுமையாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. சேதமடைந்த பயிா்களுக்கு விவசாயிகள் இழப்பீடு கோரும்போது அவா்களின் கோரிக்கையை உறுதி செய்யவும் பயிா்களை ஆய்வு செய்வதற்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தை செயல்படுத்தும் விவகாரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு நெருங்கிப் பணியாற்றி வருகிறது. பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் நோக்கில் செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்திலும் 70 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தால் பலனடைந்தனா் என்றாா் அமைச்சா் தோமா்.
முக்கியமான திட்டம்: பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கடினமாக உழைக்கும் விவசாயிகள் இயற்கைப் பேரிடா்களால் இழப்பைச் சந்திக்கும்போது, அவா்களுக்கு உதவும் முக்கிய திட்டமாக பயிா்க் காப்பீட்டுத் திட்டம் விளங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான விவசாயிகள் பலனடைந்துள்ளனா். திட்டத்தின் கீழ் காப்பீடு பெறும் பயிா்களின் பரப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிப்பு

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



