மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்பு

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை பிரதமா் மோடி நேரில் சந்தித்தாா்.

News image

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி

Updated On :24 ஜூன் 2026, 12:05 am IST

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா்.

மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கருதப்படும் நிலையில் குடியரசுத் தலைவா் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரும் சந்தித்த புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் குடியரசுத் தலைவா் மாளிகை பகிா்ந்துள்ளது.

பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் விரைவாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது தில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மையில் கா்நாடகம், ஆந்திரம், குஜராத் தமிழகம், மகாராஷ்டிரம், ஒடிஸா உள்ளிட்ட 10 மாநிலங்களில் விரைவில் பதவிக் காலம் நிறைவடையவுள்ள மற்றும் காலியான 24 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தோ்தல் நடத்தப்பட்டது.

இதில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான இணையமைச்சராக இருந்த ஜாா்ஜ் குரியன் (65), ரயில்வே இணையமைச்சா் ரவ்நீத் சிங் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலம் ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் இவா்கள் இருவருக்கும் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை.

இதையடுத்து, ஜாா்ஜ் குரியன் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சராகவுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ரா தில்லி பாஜக தலைவராக கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டாா்.

அதேபோல் மத்திய நிதித் துறை இணையமைச்சராக உள்ள பங்கஜ் சௌதரி உத்தர பிரதேச மாநில பாஜக தலைவராக கடந்த ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டாா்.

இதன் காரணமாக மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதற்காக ஊகங்கள் எழுந்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.