தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள் பற்றி...

News image

நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள் - படம் - எக்ஸ்

Updated On :6 ஜூலை 2026, 3:59 pm IST

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு நாட்டின் தூதர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தங்களுடைய நற்சான்றிதழ்களை திங்கள்கிழமை (ஜூலை 6) சமர்ப்பித்தனர்.

மங்கோலியா, மொசாம்பிக், நிக்கராகுவா, சுரினாம், கேபான், மற்றும் பகாமாஸ் ஆகிய ஆறு நாட்டின் தூதர்களிடமிருந்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார்.

நற்சான்றிதழ்கள் என்பது ஒரு நாட்டின் தூதர் மற்றொரு நாட்டில் தனது அதிகாரபூர்வ பணியைத் தொடங்குவதற்கு முன்னர், தனது நாட்டின் தலைவரிடமிருந்து சான்றிதழ் பெற்று அதனை தான் பணி செய்யப்போகும் நாட்டின் தலைவரிடம் சமர்ப்பிக்கும் முறையாகும்.

ஏற்கெனவே, பதவி வகித்து வந்த தூதரின் பதவிக்காலம் முடிந்த பிறகு அந்தந்த நாடுகள் புதிய தூதரை நியமிக்கும். புதிய தூதர் பொறுப்பேற்கும் நாட்டுக்கு வந்ததும், அந்நாட்டின் குடியரசுத் தலைவரை (ராஷ்டிரபதி பவனில்) நேரில் சந்தித்து இக்கடிதத்தை முறைப்படி வழங்குவார்.

இதன்மூலம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அந்தத் தூதர் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முழுத்தகுதி உடையவர் என்பது உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Ambassadors from six countries presented their credentials to President Droupadi Murmu on Monday (July 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.