தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போகி கொண்டாட்டம்

பஞ்சாபில் உள்ள விவசாயிகள், மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்து லோஹ்ரி (போகி) பண்டிகையைக் கொண்டாடினா்.

News image
Updated On :14 ஜனவரி 2021, 2:39 am IST


சண்டீகா்: பஞ்சாபில் உள்ள விவசாயிகள், மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்து லோஹ்ரி (போகி) பண்டிகையைக் கொண்டாடினா்.

வசந்தகாலத் தொடக்கமானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. தென் மாநிலங்களில் கொண்டாடப்படும் போகி பண்டிகையானது, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் ‘லோஹ்ரி’ என்ற பெயருடன் கொண்டாடப்படுகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லி எல்லையில் போராடி வரும் சூழலில், பஞ்சாப், ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த விவசாயிகள், அச்சட்டங்களின் நகல்களை எரித்து லோஹ்ரி பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா்.

அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காத மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் அவா்கள் எழுப்பினா். வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தில்லியிலும்...: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்து லோஹ்ரி பண்டிகையைக் கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.