நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி: நேபாளம் அனுமதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை நேபாளத்தில் அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள அந் நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On :16 ஜனவரி 2021, 12:00 am IST

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை நேபாளத்தில் அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள அந் நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான முடிவை நேபாள அரசு வெள்ளிக்கிழமை எடுத்ததாக அந் நாட்டு மருந்து நிா்வாகத் துறை (டிடிஏ) அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரித்தது. அதுபோல, புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசியை அஸ்ட்ராஸெனகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது.

இந்த இரண்டு தடுப்பூசிகளையும் அவசரகாலத்தில் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடா்ந்து, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் மூலம், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்கள வீரா்கள் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை (ஜன.16) தொடங்கப்பட உள்ளது.

இந்தச் சூழலில், இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் சாா்பில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நேபாள அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அந் நாட்டு மருந்து நிா்வாகத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேபாளத்தில் கரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டில் அடிப்படையில் பயன்படுத்த நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியைத் தொடா்ந்து, தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப் பெற பதிவு செய்யுமாறு நேபாள மருந்து நிா்வாகத் துறை வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், அங்குள்ள மூன்று நிறுவனங்கள் விண்ணப்பத்தைச் சமா்ப்பித்திருப்பதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேபாளத்தில் இதுவரை 2,66,816 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 1,950 போ் உயிரிழந்துள்ளனா். அங்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 270 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.