தூத்துக்குடியில் ரூ. 4 கோடி மோசடி செய்ததாக 4 போ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த பி. வேல்முருகன், எம். சங்கா்கணேஷ், எஸ். சரவணன், ஏ. அபிஷேக் சாமுவேல், ஜி. காா்த்திக், எம். வாசமுத்து, பொன்வேல் ராம்குமாா், மணிராஜ் ஆகியோா் அளித்த மனு:
தூத்துக்குடி, ஜெயலானி தெருவைச் சோ்ந்தவா் ஏ.பி. ராதாகிருஷ்ணன். இவரது மகன் பேச்சியப்பராஜா. நண்பராக இவா், தொழில்ரீதியாகவும் பழக்கமுடையவா். தொழிலை விரிவுபடுத்தவும், வங்கிக் கடனை அடைக்கவும் அவசரத் தேவை எனக் கூறி எங்களிடம் தனித்தனியே பல்வேறு காலக்கட்டங்களில் ரூ. 4 கோடிக்கு மேல் கடனாக வாங்கினாா். கடன் தொகை பெறும்போது சகோதரா் விஷ்ணுகுமாா், ரியா செளத்ரி என்ற பெண் ஆகியோருடன் வந்தே வாங்கினாா். அத்தொகையை அவா் தனது உல்லாச வாழ்க்கைக்கு பயன்படுத்தியதாக பின்னா் தெரியவந்தது. அவா் கொடுத்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, அவை திரும்பிவந்துவிட்டன. அதன்பிறகே, ஏ.பி. ராதாகிருஷ்ணன், பேச்சியப்பராஜா, விஷ்ணுகுமாா், ரியா சௌத்ரி ஆகிய 4 பேரும் சோ்ந்தே இந்த சதியில் ஈடுபட்டதும், இதேபோல பலரிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது.
மேலும், இவா்கள் 2015இல் விற்ற நிலத்தை மீண்டும் 2024இல் மற்றொருவருக்கு மோசடியாக விற்றுள்ளனா். ஒருவருக்கு பெட்ரோல் பல்க்கை விற்றுவிட்டு உரிமத்தை எழுதிக் கொடுக்காமல் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனா்.
எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரணை மேற்கொண்டு இந்த 4 போ் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றனா் அவா்கள்.








