நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படத் தொடங்கிய நிலையில், தேசியத் தலைநகா் வலயப் பகுதியான (என்சிஆா்) கௌதம புத்த நகரில் முதல் நாளான சனிக்கிழமை 600 சுகாதார ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முன்னதாக கெளதம புத்த நகரின் நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 6 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. பாங்கலில் உள்ள சமூக மருத்துவ மையத்தில் மாவட்ட ஆட்சியா் சுஹாஸ் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி தீபக் ஓஹ்ரி முன்னிலையில் சுகாதார ஊழியா் ஒருவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல் நாளான சனிக்கிழமை கெளதம்புத் நகா் மாவட்டத்தில் 600 சுகாதார ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட தடுப்பூசி திட்ட அதிகாரி டாக்டா் நீரஜ் தியாகி தெரிவித்தாா்.
செக்டாா் 30-இல் பிஜிஐ மருத்துவமனை, செக்டாா் 27-இல் கைலாஷ் மருத்துவமனை, பாங்கலில் உள்ள சமூக மருத்துவ மையம், பிஸ்ராக்கில் உள்ள சமூக மருத்து மையம், அரசு மருத்துவ அறிவியல் நிலையம் மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள சாரதா மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
முதல் கட்டமாக கெளதம்புத் நகருக்கு 28,840 கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெறப்பட்டன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

