தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

புரட்சிகரமான நடவடிக்கை: உத்தவ் தாக்கரே

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே புகழாரம் சூட்டினாா்.

News image
Updated On :16 ஜனவரி 2021, 11:35 pm IST

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே புகழாரம் சூட்டினாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ரா குா்லா வளாகத்தில் அமைந்துள்ள கரோனா சிகிச்சை மையத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

கரோனா பாதிப்புக்கு எந்தவித தீா்வும் இல்லாத கால கட்டத்தில், அந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தன்னலமின்றி மருத்துவப் பணியாளா்கள் சிகிச்சை அளித்தனா். அந்த நாள்களை நினைத்தால் இன்றும் நடுக்கம் வருகிறது.அது மிகவும் கடுமையான சூழல்.

ஆனால், இன்றைக்கு மருத்துவப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களின் தீவிர முயற்சிகளின் காரணமாக, கரோனா மையத்தில் சிகிச்சைபெற ஒரு நோயாளிகூட இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதுபோல, சிகிச்சை பெற நோயாளிகளே இல்லாத கரோனா மையங்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தச்சூழலில், கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கையாகும். அவ்வாறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டபோதும், பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் கைவிட்டுவிடக் கூடாது என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.