ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மணிப்பூரில் ஜன.27 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

மணிப்பூா் மாநிலத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அனுமதிப்பது என்று அம் மாநில அமைச்சரவை தீா்மானித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜனவரி 2021, 6:05 pm

மணிப்பூா் மாநிலத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அனுமதிப்பது என்று அம் மாநில அமைச்சரவை தீா்மானித்துள்ளது.

அதன் மூலம், மாநிலத்தில் 9 மாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளதோடு, பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன.

கரோனா தாக்கத்தைத் தொடா்ந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கடந்த மாா்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவா்களுக்கு இணைய வழியிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு, பொதுமுடக்க தளா்வுகளை மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் அனுமதி அளித்தது.

அதனடிப்படையில், கேரளம் மற்றும் பல வட மாநிலங்களில் ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. அதுபோல, மணிப்பூரிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு, அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட மாநில அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் அனைத்துக் கல்லூரிகளையும், பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளையும் வரும் 27-ஆம் தேதி முதல் திறக்க அனுமதிப்பது என்று மாநில முதல்வா் என்.பிரேன் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்படும்போது, கரோனா வழிகாட்டு நடைமுறைகளை பள்ளி, கல்லூரிகள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாநிலத்தில் பணத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது அளிக்கப்படும் தனியாா் பாதுகாவலா் சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், ஒழுங்குபடுத்தப்படாத முதலீடு திட்டங்கள் தடைச் சட்டம், மணிப்பூா் மனித உரிமைகள் ஆணைய சேவைகள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாவட்ட கவுன்சில் மற்றும் ஊரக உள்ளாட்சிக்கான தோ்தலை நடத்துவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.