சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சி: முன்களப் பணியாளர்

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தன்னார்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

News image

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சி: முன்களப் பணியாளர்

Updated On :16 ஜனவரி 2021, 12:43 pm IST

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தன்னார்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் கரோனா தடுப்பூசி போடும் பணியை அந்தந்த மையங்களில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மேற்கொண்டனர்.

ஷெரி காஷ்மீர் இன்ஸ்ட்டிடியூட் மெடிக்கல் சயின்ஸ் மையத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பிறகு பேசிய அவர், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்க்கியளிக்கிறது. மற்றவர்களை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் நான் முதல் நபராக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.