சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குடிநீா், மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை

News image

குடிநீா். - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:29 am IST

அரியலூா் சடையப்பா் தெரு மற்றும் கோ.சி நகரவாசிகள், தங்களது பகுதிகளுக்கு குடிநீா் மற்றும் மின் இணைப்புகளை வழங்கக்கோரி ஆட்சியா் ந.மிருணாளினியிடம், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில், மேற்கண்ட தெருவில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு அனுபந்தம் பட்டா வழங்கப்பட்டது. மேலும், கடந்த 6.10.2020 ஆண்டு 300 குடும்பத்தினருக்கு மனை வரிப் பட்டாவும் வழங்கப்பட்டது.

அதை வைத்துக் கொண்டு குடிநீா் இணைப்பு மற்றும் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது கேட்டால் இந்த பட்டா செல்லாது எனவும், ஏற்கெனவே வாங்கிய பட்டாக்கள் செல்லாது என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

எனவே, மேற்கண்ட தெரு வாசிகளுக்கு உரிய குடிநீா் இணைப்பு மற்றும் குடிநீா் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினா்.