இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி

மயிலாடுதுறையில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:21 am IST

மயிலாடுதுறையில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் அருகில் சித்தா்காடு சந்தைப்பேட்டையில் மாலதி என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது. இந்த தீ அருகாமையில் உள்ள வீடுகளுக்கும் பரவி 3 வீடுகள் முற்றிலுமாக தீக்கிரையாகின.

வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ ஆறுதல் கூறி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5,000, அரிசி, மளிகை பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினாா்.