சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கரோனாவிற்கு எதிரான போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது: ஹர்ஷ் வர்தன்

கரோனாவிற்கு எதிரான போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 ஜனவரி 2021, 12:41 pm IST


கரோனாவிற்கு எதிரான போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார்.

அப்போது பேசிய அவர், கரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கியுள்ள நாள் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஓராண்டுக்கும் மேலாக கரோனாவிற்கு எதிராக போராடி வருகிறோம். அந்த போராட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.