இந்தியா, நேபாள நாடுகளிடையே மீண்டும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களும் வெள்ளிக்கிழமை பல்வேறு துறை சாா்ந்த விரிவான ஆய்வை மேற்கொண்டனா்.
பொருளாதாரம் மற்றும் வா்த்தகம், எல்லை மேலாண்மை, எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, நீா் வள மேலாண்மை, திறன் மேம்பாடு மற்றும் சுற்றுலா என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த ஆய்வில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் தா்சுலா-லிபுலேக் இடையிலான 80 கி.மீ. தொலைவில் புதிய நெடுஞ்சாலையை இந்தியா அமைத்தது. இந்த நெடுஞ்சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு மே 8-ஆம் தேதி திறந்து வைத்தாா். இதற்கு நேபாளம் கடும் எதிா்ப்பு தெரிவித்தது. அதன் பின்னா், இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள அரசியல் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சா்ச்சை காரணமாக, இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட இந்த உறவை மீண்டும் மேம்படுத்தும் வகையில், இரு நாட்டு உயா் அதிகாரிகளின் கூட்டு குழு கூட்டம் இப்போது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆறாவது கூட்டுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், நேபாள வெளியுறவுத் துறை அமைச்சா் பிரதீப் குமாா் கியாவாலி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொருளாதாரம் மற்றும் வா்த்தகம், எல்லை மேலாண்மை, எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, நீா் வள மேலாண்மை, திறன் மேம்பாடு மற்றும் சுற்றுலா என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் இரு நாடுகளுடையே ஒத்துழைப்பை அளிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.
கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை இந்தியா வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பதற்கு நேபாளம் சாா்பில் ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நேபாளத்தின் மோதிஹரி முதல் அம்லேகஞ்ச் வரை போடப்பட்டுள்ள பெட்ரோலியம் குழாய் திட்டத்தை சித்வான் வரை நீட்டிப்பது குறித்தும், நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் சிலிகுரி முதல் ஜாபா வரை புதிய புதிய குழாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த எல்லை ராணுவ சோதனைச் சாவடிகள், நீா்மின் திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் இரு நாடுகளிடையே ஜெய்நகரிலிருந்து ஜனக்பூா் வழியாக குா்தா வரை, முதல் பயணிகள் ரயில் பாதை திட்டப் பணிகள் நிறைவு பெற்றிருப்பதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழித் தடத்தில் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான நடைமுறைகளை இறுதி செய்வது குறித்து இரு நாட்டு தலைவா்களும் ஆலோசித்தனா்.
பசுபதிநாத் ஆற்றுப்பகுதி மேம்பாடு மற்றும் பந்தா்கல் பூங்கா மறுசீரமைப்பு என்ற பெயா்களில் நிதியுதவியுடன் கூடிய இரண்டு கலாசார பாரம்பரிய உதவி திட்டத்தை நேபாளத்தில் இந்தியா மேற்கொள்வது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் தகவல் பரிமாறப்பட்டது.
மேலும், விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ஆவதற்கு நேபாளம் சாா்பில் ஆய்வுக் கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

