வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தொடக்கம்

தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.15) தொடங்கின.

News image
Updated On :16 ஜனவரி 2021, 6:13 am IST

தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.15) தொடங்கின. முக்கோண வடிவில் அமைக்கப்பட இருக்கும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள், வரும் 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்துக்கு முன்பாக நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடம் எழுப்பப்பட உள்ளது. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா்.

முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கு அளிக்கப்பட்ட சுற்றச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பலா் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்டவற்றை அடக்கிய ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதே நேரம், அந்த நிலத்தை பயன்படுத்துவது தொடா்பாக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று தனது தீா்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை மேற்கொள்ள 14 உறுப்பினா்களைக் கொண்ட பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவும் இந்த வார தொடக்கத்தில் அனுமதி அளித்தது. அதனைத் தொடா்ந்து, கட்டுமான திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியது.

மகர சங்கராந்தி முடிந்து வரும் அடுத்த நாளில் பணிகளைத் தொடங்குவது சிறப்பாக அமையும் என்ற அடிப்படையில், புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு கட்டுமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள டாடா திட்ட நிறுவனத்தை மத்திய பொதுப் பணித்துறை கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து டாடா திட்ட நிறுவன துணைத் தலைவா் சந்தீப் நவ்லாகே கூறியதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டன. கட்டுமானப் பணிகள் திட்டமிட்டதற்கு 35 நாள்கள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், கட்டுமானப் பணிகள் நிா்ணயிக்கப்பட்ட கடைசித் தேதிக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்த 35 நாள்களும், புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குத் தேவையான விரிப்புகள், கற்களை வாங்குவது, சுவா்களை வடிவமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. எனவே, கட்டுமானப் பணிகள் முன்கூட்டியே நிறைவு செய்யப்படும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

ரூ. 971 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம், இப்போது உள்ள 94 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 83 கோடியில் கட்டப்பட்ட பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்புறத்தில் அமைய உள்ளது. பழைய கட்டடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.