நாட்டில் இதுவரை 2,24,311 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:
"இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 6 மாநிலங்களில் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 553 அமர்வுகளில் மொத்தம் 17,072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்கள் ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், மணிப்பூர் மற்றும் தமிழகம்.
ஜனவரி 17 வரை மொத்தம் 2,24,310 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 3 பேருக்கு மட்டுமே மருத்துவமனை உதவி தேவைப்பட்டது. அவர்களில் 2 பேர் வடக்கு ரயில்வே மருத்துவமனையிலிருந்தும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்தும் வீடு திரும்பினர். மற்றொருவர் எய்ம்ஸ் ரிஷிகேஷில் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அணையை ஜூன் இறுதியில் திறக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு

மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சாலை விபத்து: கிராம மக்கள் மறியல்

திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



