மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாம்: முதல்முறை வாக்களித்தவர்களுக்கு செடிகள் பரிசு

அசாம் சட்டப்பேரவையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்முறை வாக்களித்தவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் செடிகள் பரிசாக வழங்கப்பட்டன. 

News image
Updated On :1 ஏப்ரல் 2021, 10:07 am

அசாம் சட்டப்பேரவையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்முறை வாக்களித்தவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் செடிகள் பரிசாக வழங்கப்பட்டன. 

அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்.1) 13 மாவட்டங்களிலுள்ள 39 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். எனவே அவர்களை ஊக்குவிக்கும் வகையில், வாக்குச் சாவடிகளில் முதல்தலைமுறை வாக்காளர்களுக்கு செடிகள் பரிசாக வழங்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.