எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அச்சுறுத்தும் கரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 72,330 பேருக்கு தொற்று; 459 பேர் பலி

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 72,330 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,22,21,665 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2021, 5:11 am

DIN


புதுதில்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 72,330 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,22,21,665 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 459 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இது இந்த ஆண்டின் அதிகபட்ச தினசரி உயிரிழப்பாகும். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,62,927 -ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் மேலும் கூறியிருப்பதாவது:

தொடா்ச்சியாக 22-ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,84,055 ஆகவும், இது மொத்த பாதிப்பில் 4.55 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. அதேசமயம் மீட்பு விகிதம் 94.11 சதவீதமாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 40,382 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,14,34,301 ஆகவும், இறப்பு விகிதம் 1.34 சதவீதமாகவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும் கடந்த படிப்படியாக வேகம் பெற்று டிசம்பா் 19-இல் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) படி,  நாட்டில் மாா்ச் 31-ஆம் தேதி வரை 24,47,98,621 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,25,681 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வியாழக்கிழமை காலை வரை நாடு முழுவதும் 6,51,17,896 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.