பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது,
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பெண்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில், பஞ்சாப் அரசு (ஏப்ரல் 1) இன்று முதல் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் தனது கட்சி மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. மேலும், 85 சதவீத வாக்குறுதிகளைத் தனது அரசு நிறைவேற்றியது. எல்லோரும் பெண்கள் அதிகாரம் பற்றிப் பேசுகின்றனர், ஆனால் பஞ்சாப் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பேருந்து கட்டன விலையை 50 சதவீதம் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், பஞ்சாஙப அரசு அது முற்றிலும் இலவசமாக்கியது. மேலும் தனியார் பேருந்துக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகளைப் புரிந்துகொண்டு கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பெண்கள் பஞ்சாப் மாநிலத்தவர் என்பதை உறுதி செய்யும் வகையில், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை போன்றவற்றை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் சுமார் 1 கோடியே 30 லட்ச பெண்கள் பயனடைவார்கள். மேலும் இந்த இலவச பயணம் அரசுக்குச் சொந்தமான ஏசி, வால்வோ மற்றும் எச்.வி.ஏ.சி பேருந்துகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே. வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் வன்முறைக்கு வாய்ப்பு! வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!

கூட்டத்திற்கும் ஓட்டுக்கும் சம்பந்தமில்லை! விஜய் குறித்து நயினார் நாகேந்திரன்

முட்டாள்களே...! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!
பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


