வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நந்திகிராம் வாக்குச்சாவடிக்கு ஏன் சென்றேன்?: மம்தா விளக்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (ஏப்.1) 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வாக்குச்சாவடியினுள் ஏன் சென்றேன் என்பது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

News image
மம்தா பானர்ஜி
Updated On :2 ஏப்ரல் 2021, 11:17 am

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (ஏப்.1) 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வாக்குச்சாவடியினுள் ஏன் சென்றேன் என்பது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்திருந்து, உள்ளூர் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தனர் என்று கூறினார்.

மேற்கு வங்க மாநிலம் பலகதா பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, 

''நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட  வாக்குச்சாவடியில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்திருப்பதாக தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்தேன்.

வெளிமாநிலங்களைச் சேர்ந்த குண்டர்கள் கைத்துப்பாக்கிகளுடன் அங்கு இருந்தனர். அவர்கள் பிற மொழிகளைப் பேசினர். அவர்கள் பாஜக கட்சியைச் சேர்ந்த பிற மாநிலக் குண்டர்களாக இருப்பார்கள். 

வாக்குச்சாவடியில் உள்ளூர் மக்களை அனுமதிக்காகது குறித்து ஆளுநரிடம் புகாரளித்தேன். விரைந்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.