எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘மேற்கு வங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கும் குஜராத்திகள்’: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தைக் கைப்பற்ற குஜராத்திகள் முயற்சித்து வருவதாக திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
‘மேற்கு வங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கும் குஜராத்திகள்’: மம்தா பானர்ஜி
Updated On :4 ஏப்ரல் 2021, 9:53 am

DIN

மேற்கு வங்க மாநிலத்தைக் கைப்பற்ற குஜராத்திகள் முயற்சித்து வருவதாக திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் ஹவ்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, “உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் இருந்து அழைத்து வரப்பட்ட குண்டர்கள் மூலம் மேற்குவங்கத்தை கைப்பற்ற குஜராத்திகள் முயல்கின்றனர்” எனத் தெரிவித்தார். 

மேலும் “ மேற்குவங்கத்தில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க பாஜக முயல்கிறது. குஜராத்தைப் போல வங்கத்தைக் கைப்பற்ற விட மாட்டோம்” என குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.