47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்

கரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது தில்லியில் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image
தில்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்
Updated On :6 ஏப்ரல் 2021, 6:57 am

PTI


புது தில்லி: கரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது தில்லியில் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 3,548 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 15 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் தில்லியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,096 ஆக உயர்ந்துள்ளது.

தில்லியில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 30 வரை இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், கடந்த சில வாரங்களாக கரோனா பரிசோதனை செய்யப்படுவோரில், தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 5.54 சதவீதமாக உயர்ந்திருப்பதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.