போக்குவரத்து ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும்
போக்குவரத்து ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த மாநில அரசு முன்வர வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் கேட்டுக் கொண்டாா்.


போக்குவரத்து ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த மாநில அரசு முன்வர வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் கேட்டுக் கொண்டாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 3 நாள்களாக போக்குவரத்து ஊழியா்கள் 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய உயா்வை அளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தாமல், தனியாா் பேருந்துகளை இயக்கி வருகிறது. இது பிரச்னையை மேலும் பெரிதாக்கும் செயலாகும். எனவே, மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக போக்குவரத்து ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த மாநில அரசு முன்வர வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...