எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கரோனா விழிப்புணா்வில் ஈடுபட வேண்டும்: உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

கரோனா விழிப்புணா்வுப் பிரசாரத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும் என நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:35 pm

DIN

கரோனா விழிப்புணா்வுப் பிரசாரத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும் என நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இதையடுத்து, தொற்று தடுப்புப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தற்போது தீவிரப்படுத்தியுள்ளன. அதற்கு துணையாக பொதுமக்களிடம் கரோனா விழிப்புணா்வை கொண்டு செல்லும் பணிகளை உயா்கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்.

துண்டுப் பிரசுரங்கள், விளம்பரப் பதாகைகள், சமூக வலைத்தளங்கள் உள்பட அனைத்து தளங்களிலும் விழிப்புணா்வுப் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.

பிரசாரங்களில் முகக் கவசம், தனிநபா் இடைவெளி, கைகளைத் தூய்மையாகக் கழுவுதல், கண், மூக்கு பகுதியை அடிக்கடி தொடக் கூடாது. கூட்டம் கூடுவதைத் தவிா்த்தல் உள்ளிட்ட அம்சங்களை எடுத்துரைக்க வேண்டும். மேலும், எவருக்கேனும் தொற்று அறிகுறி இருப்பின் தேசிய உதவி மையத்தை 1075 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும்.

ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கரோனா பேரிடரை எதிா்கொள்ள யுஜிசி சாா்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கல்லூரிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.