மகாராஷ்டிரத்தில் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் கரோனா பாதிப்பு பெரிதளவில் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர், மாநிலத்தில் கடுமையான பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதை முதல்வர் உத்தவ் தாக்கரே வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தனர்.
துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், "வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு நிதித் தொகுப்பு வழங்குவது பற்றி திட்டமிடப்பட்டு வருகிறது" என்றார். அமைச்சர் அசோக் சாவன் கூறுகையில், "பொது முடக்க முறை, நாள்கள் உள்ளிட்டவை பற்றிய முடிவுகள் விரைவில் இறுதி செய்யப்படும்" என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பொது முடக்கம் பற்றி முடிவெடுக்கப்படவில்லை. எனினும், கடுமையான பொது முடக்கத்தை அமல்படுத்தும் எண்ணத்திலேயே முதல்வர் இருந்தார். பொது முடக்கம் அவசியம் என பாஜக நினைக்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மக்களுக்கான நிதித் தொகுப்புகள் பற்றி அரசு திட்டமிட வேண்டும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!

மேட்டுப்பாளையத்தில் ஜாலியாக உலா வந்த பாகுபலி!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


