எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை: மம்தா விளக்கம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய ஆயுத காவல் படை பற்றிய கருத்து குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஏப்ரல் 2021, 11:57 am

DIN


தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய ஆயுத காவல் படை பற்றிய கருத்து குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.

இதுபற்றி மம்தா அளித்த விளக்கம்:

"மத்திய ஆயுத காவல் படைக்கு எதிராக வாக்காளர்களை திரட்டுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை நான் மீறவில்லை."

முன்னதாக, மேற்கு வங்க பேரவைத் தேர்தலின் முதலிரண்டு கட்ட வாக்குப்பதிவில் மத்தியப் படைகள் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மத்தியப் படைகள் பற்றிய கருத்து குறித்து அவரது நிலைப்பாட்டை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. 

மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பும் இரண்டாவது நோட்டீஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.