சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உ.பி.,யில் 6,000 கரோனா தடுப்பூசி மையங்கள்: யோகி ஆதித்யநாத்

உ.பி.,யில் 6,000 கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம்.

Updated On :11 ஏப்ரல் 2021, 11:57 am

உ.பி.,யில் 6,000 கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு அதிகமானோா், 45 வயதுக்கு அதிகமானோா் என கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானோரின் வட்டாரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 
கடந்த சில தினங்களுக்கு முன்னா் மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி, ஏப். 11 முதல் 14-ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவாகக் கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொண்டாா். 
அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம்களில் 4 நாள்கள் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. சக்தி பவனில் நடந்த தடுப்பூசி திருவிழாவை ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்கிடம் கூறுகையில், 4 நாள்கள் கரோனா தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கியது. 
மாநிலம் முழுவதும் 6,000 கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. தகுதியுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.