நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியிடத்திலேயே ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6,000 ஊழியர்கள் தடுப்பூசி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 879 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கரோனா பரவலைக் குறைக்க ஏப்ரல் 11- 14 வரையில் நான்கு நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

