சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

45 வயதுக்கு மேற்பட்ட 6,000 ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி: ஏர் இந்தியா

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. 

News image
Updated On :13 ஏப்ரல் 2021, 9:47 am

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியிடத்திலேயே ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா  45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6,000 ஊழியர்கள் தடுப்பூசி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 879 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கரோனா பரவலைக் குறைக்க ஏப்ரல் 11- 14 வரையில் நான்கு நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.