செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து...

Punjab Kings' captain Shreyas Iyer leaves the ground after losing his wicket during the Indian Premier League cricket match between Chennai Super Kings and Punjab Kings in Chennai, India, Friday, April 3, 2026. (AP Photo/Aijaz Rahi)

ஆட்டமிழந்து வெளியேறிய பஞ்சாப் அணியின் கேப்டன். - படம்: ஏபி

Published On :8 ஏப்ரல் 2026, 3:10 pm IST

ஐபிஎல் 2026 சீசனில் இரண்டாவது முறையாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டது.

முதல்முறையாக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதற்காக அணியின் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை என்பதால் இந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் நடத்தை விதிகள் 2.22ஐ மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்ற வீரர்களுக்கும் (இம்பாக்ட் வீரர் உள்பட) 6 லட்சம் அல்லது போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராம் விதிக்கப்பட்டதாக ஐபிஎல் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

Summary

PBKS captain Shreyas Iyer fined for slow over rate vs CSK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.