ஐபிஎல் 2026 சீசனில் இரண்டாவது முறையாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டது.
முதல்முறையாக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதற்காக அணியின் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை என்பதால் இந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் நடத்தை விதிகள் 2.22ஐ மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்ற வீரர்களுக்கும் (இம்பாக்ட் வீரர் உள்பட) 6 லட்சம் அல்லது போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராம் விதிக்கப்பட்டதாக ஐபிஎல் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
Summary
PBKS captain Shreyas Iyer fined for slow over rate vs CSK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவை வீழ்த்திய பிறகு தனுஷ் படக்காட்சியைப் பகிர்ந்த பஞ்சாப்!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுமா?

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

சிஎஸ்கேவுடன் கைகோர்த்த நாவியூபிஐ!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


