இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா: நாட்டில் இன்றைய நிலவரம் அறிய

நாட்டில் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 879 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.

News image
கரோனா: நாட்டில் இன்றைய நிலவரம் அறிய
Updated On :13 ஏப்ரல் 2021, 5:03 am

DIN


புது தில்லி: நாட்டில் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 879 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1.61 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா பாதித்த 879 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,71,058 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 34 நாள்களாக தொடர்ந்து கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை 12.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 9.24 சதவீதமாகும்.

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி மிகக் குறைந்த அளவாக 1.35 லட்சம் பேரும், மிக அதிக அளவாக 2020 செப்டம்பர் 18-ல் 10.17 லட்சமுமாக இருந்தது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,22,53,697 ஆக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.