இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மீண்டும் கரோனா வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்; இம்முறை மகாராஷ்டிரத்தில்

கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் விரைவு ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன.

News image
மீண்டும் கரோனா வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்; இம்முறை மகாராஷ்டிரத்தில்
Updated On :13 ஏப்ரல் 2021, 5:32 am

DIN

புது தில்லி: கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் விரைவு ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன. அதுபோல இந்த முறை மகாராஷ்டிரத்தின் சிறிய மாவட்டத்தில் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் கோரப்பட்டுள்ளன.

மிகச் சிறிய மாவட்டமான நந்தூர்பார் பகுதியில் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளின் தேவைக்காக, இந்திய ரயில்வேயிடம் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை மாவட்ட நிர்வாகம் கோரியுள்ளது.

அங்கு மார்ச் 31 முதல் ஏப்ரல் 15 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

20 பெட்டிகள் அடங்கிய கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளின் ஒவ்வொரு பெட்டியிலும் 16 நோயாளிகள் தங்கவைக்க வசதி உள்ளது. இதுபோல 90 பெட்டிகளை நந்தூர்பார் நிர்வாகம் கோரியுள்ளது. இதுவரை 21 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.