47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கொல்கத்தா செல்லும் போது இது மிகவும் அவசியம்

மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
கொல்கத்தா செல்லும் போது இது மிகவும் அவசியம்
Updated On :14 ஏப்ரல் 2021, 10:42 am

DIN


மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், இந்த மாநிலங்களிலிருந்து வருவதாக இருந்தால், 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்று மாநில அரசு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொல்கத்தா விமான நிலையத்தின் சுட்டுரைப் பக்கத்தில், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து கொல்கத்தா விமான நிலையம் வரும் பயணிகள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் நேற்று ஒரே நாளில் 1,200 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலும் நேற்று 4,800 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.