நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நாட்டில் புதிதாக 1.84 லட்சம் பேருக்கு கரோனா; 1,027 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,84,372 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,027 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.

News image
Updated On :14 ஏப்ரல் 2021, 4:14 am


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,84,372 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,027 பேர் கரோனாவுக்குப் பலியாகினர்.

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 1,84,372 பேர் உள்பட மொத்த பாதிப்பு 1,38,73,825 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை 1,23,36,036 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 13,65,704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் கரோனா பாதித்த 1,027 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 11,11,79,578 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.