ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய ரயில்வே அளிக்கும் விளக்கம்

அச்சம் கொள்ளத் தேவையில்லை என ரயில் நிலையங்களில் குவியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

News image
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய ரயில்வே அளிக்கும் விளக்கம்
Updated On :14 ஏப்ரல் 2021, 7:07 am

PTI


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து, பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சம் கொள்ளத் தேவையில்லை என ரயில் நிலையங்களில் குவியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

144 தடை உத்தரவு உள்பல பல்வேறு கட்டுப்பாடுகள் பிறக்கப்பட்டிருப்பதால், விரைவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில், மகாராஷ்டிர மாநிலம் லோகமானிய திலகர் ரயில் நிலையத்தில் நெடுந்தொலைவு செல்லும் ரயில்களில் ஏற ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், மத்திய ரயில்வே வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக குவிய வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காமல் காணப்படும் மக்கள் கூட்டத்தை நெறிப்படுத்த மத்திய ரயில்வே காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரத்தின் துவக்கம் முதலே மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் முக்கிய ரயில் நிலையங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் சொந்த ஊர்களுக்கு ரயிலேற கூட்டம் கூட்டமாக வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.